search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

    சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் கருக்கட்டான் குளத்தைச் சேர்ந்த பாண்டி மகன் முத்துவேல் (வயது 28). இவரது அக்காவை மொட்டைச்சாமி (33) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். மொட்டைச்சாமி மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக முத்துவேலுக்கு தகவல் வந்தது.

    இது குறித்து அவரை சத்தம் போட்டு தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மொட்டைச்சாமி அவரை தாக்கி காயப்படுத்தினார். இதனை தடுக்க வந்த ராமர் என்பவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.

    படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து முத்துவேல் கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து மொட்டைச்சாமியை கைது செய்தனர்.

    Next Story
    ×