என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை கண்ணனுக்கு எதிராக பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்3 Jan 2020 10:07 AM GMT (Updated: 3 Jan 2020 10:07 AM GMT)
நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பகுஜன் சமாஜ் கட்சியினர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி புனித அந்தோணியார் தெருவைச் சேர்ந்த மனோகரன் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் இன்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 29-ந் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டம் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் நெல்லைக் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக விமர்சித்து இழிவுபடுத்தி பேசியுள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். 4 முறை உத்தரபிரதேச முதல்வராகவும், பாராளுமன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த மக்களால் மதிக்கக்கூடிய தலைவரை ஜாதி வன்முறையில் இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
எனவே இது பலரது மனதை புண்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என தங்களது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் சார்பில் நெல்லை கண்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி புனித அந்தோணியார் தெருவைச் சேர்ந்த மனோகரன் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் இன்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 29-ந் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டம் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் நெல்லைக் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக விமர்சித்து இழிவுபடுத்தி பேசியுள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். 4 முறை உத்தரபிரதேச முதல்வராகவும், பாராளுமன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த மக்களால் மதிக்கக்கூடிய தலைவரை ஜாதி வன்முறையில் இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
எனவே இது பலரது மனதை புண்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என தங்களது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் சார்பில் நெல்லை கண்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X