என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி உறவினர்களுடன் வேட்பாளர் மறியல்-தற்கொலை முயற்சி
பாடாலூர்:
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மருத முத்து, தொண்டப்பாடியைச் சேர்ந்த பழனிவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் மருத முத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பழனிவேல், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. கீழ உசேன்நகர் பகுதியில் உள்ள வாக்குகளை எண்ண வில்லை. அங்கு எனக்கு 170 வாக்குகள் உள்ளது. எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை பழனிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் அல்லிநகரம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே மறியலில் ஈடுபட்ட பழனிவேல் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் திடீரென உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு நின்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்