என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை புதூர் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பரமன் மனைவி ஆதிலெட்சுமி (வயது 42). இவரது மகளுக்கும் சந்தோஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தோஷ்குமாரின் மனைவி கடந்த சில மாதங்களாக குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஆதிலெட்சுமி தனது உறவினரான இந்திரா (50) என்பவரை பார்க்க வந்தார்.
அப்போது அங்கு வந்த சந்தோஷ்குமார் உன்னால் தான் எனது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார் என கூறி அவரை தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த இந்திராவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ஆதிலெட்சுமி வைகை அணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்