search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக போராட்டம்
    X
    திமுக போராட்டம்

    தேர்தல் முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி சேலத்தில் திமுகவினர் போராட்டம்

    சேலம் எடப்பாடியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சேலம்:

    தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடைபெற்ரு வருகிறது.

    ஆரம்பம் முதலே அதிமுகவும் மற்றும் திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. 

    இதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி தொகுதியில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் அதிகாரிகள் முடிவுகளை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், எடப்பாடியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி தி.மு.க. எம்.பி பார்த்திபன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×