என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே லோடு ஆட்டோ-மினி லாரி மோதல்: 2 பேர் பலி
Byமாலை மலர்2 Jan 2020 9:43 AM GMT (Updated: 2 Jan 2020 9:43 AM GMT)
தஞ்சை அருகே நின்ற மினி லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
காரைக்கால் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 28) டிரைவர். இவர் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சரக்கு ஆட்டோவில் மீன் ஏற்றி கொண்டு தஞ்சாவூருக்கு புறப்பட்டார். அதில் தனது நண்பரான தரங்கம்பாடியை சேர்ந்த திலீப் (24) என்பவரையும் அழைத்து வந்து கொண்டிருந்தார். அந்த ஆட்டோ நள்ளிரவில் தஞ்சை பள்ளி அக்ரஹாரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் மூங்கில் கம்பு லோடு ஏற்றி வைத்து நின்ற மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ மோதியது. இதில் மூங்கில் கம்புகள் சரக்கு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே இருந்த விஜய், திலீப் மீது குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த தஞ்சை நகர விபத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுக்குள் சிக்கி இறந்த விஜய், தீலிப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 28) டிரைவர். இவர் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சரக்கு ஆட்டோவில் மீன் ஏற்றி கொண்டு தஞ்சாவூருக்கு புறப்பட்டார். அதில் தனது நண்பரான தரங்கம்பாடியை சேர்ந்த திலீப் (24) என்பவரையும் அழைத்து வந்து கொண்டிருந்தார். அந்த ஆட்டோ நள்ளிரவில் தஞ்சை பள்ளி அக்ரஹாரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் மூங்கில் கம்பு லோடு ஏற்றி வைத்து நின்ற மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ மோதியது. இதில் மூங்கில் கம்புகள் சரக்கு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே இருந்த விஜய், திலீப் மீது குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த தஞ்சை நகர விபத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுக்குள் சிக்கி இறந்த விஜய், தீலிப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X