என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
Byமாலை மலர்2 Jan 2020 9:32 AM GMT (Updated: 2 Jan 2020 9:32 AM GMT)
ஒரத்தநாடு அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூர் ஆர்.எஸ்.மலையப்பன் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 53).
இவர் பட்டுகோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர்.
இதற்கிடையே சேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாரியம்மாள் கணவரை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சேகர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் சேகரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு மரத்தில் சேகர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஒரத்தநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாரியம்மாள் போலீசில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளது என கூறியிருந்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூர் ஆர்.எஸ்.மலையப்பன் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 53).
இவர் பட்டுகோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர்.
இதற்கிடையே சேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாரியம்மாள் கணவரை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சேகர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் சேகரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு மரத்தில் சேகர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஒரத்தநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாரியம்மாள் போலீசில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளது என கூறியிருந்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X