என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 8-ந்தேதி சாலை, ரெயில் மறியல் போராட்டம்
Byமாலை மலர்1 Jan 2020 11:50 PM GMT (Updated: 1 Jan 2020 11:50 PM GMT)
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வருகிற 8-ந்தேதி சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது.
சென்னை:
மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இதனால் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. விவசாய தொழிலாளர்கள் வேலை இன்றி அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயரும் அவலம் தொடர்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று 9 அம்ச கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
அதில் முக்கிய கோரிக்கைகள் வருமாறு:-
* தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 250 நாட்கள் வேலை, கூலி ரூ.600 ஆக உயர்த்தவேண்டும்.
* 60 வயதான விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
* வேளாண் விளை பொருட்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும்.
* குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.
* விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி தமிழகத்தில் சுமார் 500 இடங்களில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இதனால் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. விவசாய தொழிலாளர்கள் வேலை இன்றி அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயரும் அவலம் தொடர்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று 9 அம்ச கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
அதில் முக்கிய கோரிக்கைகள் வருமாறு:-
* தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 250 நாட்கள் வேலை, கூலி ரூ.600 ஆக உயர்த்தவேண்டும்.
* 60 வயதான விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
* வேளாண் விளை பொருட்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும்.
* குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.
* விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி தமிழகத்தில் சுமார் 500 இடங்களில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X