search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதல் திருமணம் செய்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

    திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஹைவேஸ்புரத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 25).

    இவரும் கலைச்செல்வி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மருதுபாண்டி பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் எரியோடு அருகே தண்டவாளத்தில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×