என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி பகுதியில், பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
Byமாலை மலர்31 Dec 2019 3:45 PM GMT (Updated: 31 Dec 2019 3:45 PM GMT)
ஆண்டிப்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து பப்பாளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த பகுதியில் விளையும் பப்பாளி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் இப்பகுதியில் பப்பாளி மரங்களை அகற்றிவிட்டு மாற்று விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், கொத்தபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மீண்டும் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பப்பாளியின் விலையும் உயர்ந்து காணப்படுவதால் பப்பாளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ பப்பாளி ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பப்பாளி சராசரியாக 2 கிலோ எடை கொண்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் பப்பாளி மரங்களில் வைரஸ் தாக்குதலால் இலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாகவும், இதைத்தடுக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த பகுதியில் விளையும் பப்பாளி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் இப்பகுதியில் பப்பாளி மரங்களை அகற்றிவிட்டு மாற்று விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், கொத்தபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மீண்டும் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பப்பாளியின் விலையும் உயர்ந்து காணப்படுவதால் பப்பாளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ பப்பாளி ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பப்பாளி சராசரியாக 2 கிலோ எடை கொண்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் பப்பாளி மரங்களில் வைரஸ் தாக்குதலால் இலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாகவும், இதைத்தடுக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X