search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X
    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    கவர்னர் பன்வாரிலால் புத்தாண்டு வாழ்த்து

    புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி வருமாறு:-

    இந்த 2020 புத்தாண்டு நன்னாளில், எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த மகிழ்ச்சியான நன்னாளில், ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இன்றியமையாததான நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வுகளை நாம் அனைவரும் வளர்ந்தோங்கச் செய்து வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிப்போம்.

    புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று இந்த புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் வழக்கமாக வாழ்த்து செய்திகளை ஆங்கிலத்தில் வெளியிடுவார். இந்த ஆண்டு தமிழில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×