search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பு
    X
    பள்ளிகள் திறப்பு

    அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் அரசுப் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு

    தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுதேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3-ம் தேதி என மாற்றப்பட்டது.

    சித்தரிப்பு படம்

    இந்நிலையில், விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இன்று மாலை அறிவித்துள்ளது.
    Next Story
    ×