என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியிடம் வரதட்சணை கொடுமை - ஓட்டல் மேலாளர் மீது வழக்கு
Byமாலை மலர்30 Dec 2019 12:13 PM GMT (Updated: 30 Dec 2019 12:13 PM GMT)
திருச்சி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய ஓட்டல் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மெயின் ரோடு இறுச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 32). இவர் தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரம்யாவின் பெற்றோர் 30 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.
இருவரும் திருமணத்திற்கு பிறகு திருச்சி புத்தூர் பூந்தோட்டம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியன் வீடுகட்டவும் ,வரதட்சணையாகவும் ரம்யாவிடம் ரூ. 3 லட்சம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரம்யா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பாண்டியன், அவரது அம்மா பஞ்சவர்ணம் மற்றும் உறவினர் வள்ளியம்மாள், கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மெயின் ரோடு இறுச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 32). இவர் தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரம்யாவின் பெற்றோர் 30 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.
இருவரும் திருமணத்திற்கு பிறகு திருச்சி புத்தூர் பூந்தோட்டம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியன் வீடுகட்டவும் ,வரதட்சணையாகவும் ரம்யாவிடம் ரூ. 3 லட்சம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரம்யா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பாண்டியன், அவரது அம்மா பஞ்சவர்ணம் மற்றும் உறவினர் வள்ளியம்மாள், கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X