என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மகளிர் அணியினர் கோலம்
Byமாலை மலர்30 Dec 2019 11:18 AM GMT (Updated: 30 Dec 2019 11:18 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க. மகளிரி அணையினர் வீட்டின் முன்பு கோலமிட்டனர்.
கோவை:
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பெண்கள் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவிக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து கோவை, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டப்பாளையத்தில், மாநகர் மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கோலமிட்டு இருந்தனர். இது குறித்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி கூறியதாவது,
குடியுரிமை திருத்த சட்டத்தால் ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு எங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளோம். இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பெண்கள் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவிக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து கோவை, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டப்பாளையத்தில், மாநகர் மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கோலமிட்டு இருந்தனர். இது குறித்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி கூறியதாவது,
குடியுரிமை திருத்த சட்டத்தால் ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு எங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளோம். இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X