என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் 31 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு
Byமாலை மலர்29 Dec 2019 3:00 PM GMT (Updated: 29 Dec 2019 3:00 PM GMT)
உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி நடந்த 30 வாக்குச்சாவடிகளில் வரும் 31 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 27 ஆம் தேதி பல்வேறு ஊராட்சிகளில் முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது சில வாக்குச் சாவடிகளில் குளறுபடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வேட்பாளர்களுக்கு சின்னங்களை மாற்றி வழங்கியது, வாக்குச் சீட்டுகளில் சின்னம் மாற்றி அச்சானது உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவின் போது சில பகுதிகளில் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து குளறுபடி நடந்த 30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள்(31 ஆம் தேதி) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் 158 ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தர்மபுரி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 30 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X