என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானியத்தில் விதை பெற்று பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய அதிகாரி வேண்டுகோள்
Byமாலை மலர்28 Dec 2019 6:06 PM GMT (Updated: 28 Dec 2019 6:06 PM GMT)
மானியத்தில் விதை பெற்று பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர்:
பெரிய வெங்காயம் சாகுபடி ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் 550 கிலோ விதை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெரிய வெங்காயம், விதை மூலமாக மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்பதால் சிறிய வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். தற்போது மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பு போன்ற காரணங்களால் பெரிய வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ ரூ.130 வரை விலை உயர்ந்துள்ளது இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்தால் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு கிலோ விதை ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கு 135 ஏக்கரில் பயிரிட 550 கிலோ விதை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
எனவே வெங்காயம் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் நில ஆவனங்களான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெரிய வெங்காய விதைகளை பெற்று பயன் பெறலாம். வட்டார வாரியாக தோட்டக்கலை உதவி இயக்குனர் அவர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கரூர் மற்றும் தாந்தோணி ராஜவேலு 9751678794, அரவக்குறிச்சி ஆ.கவிதா 9790107117, க.பரமத்தி கூ.தமிழ்ச்செல்வி 9843643170, கிருஷ்ணராயபுரம் சாகுல் இம்ரான் அலி 9994629884, குளித்தலை கலா 9843196095, தோகைமலை பிரேமா 9750262060, கடவூர் தமிழ்செல்வி 9445117941 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் சாகுபடி ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் 550 கிலோ விதை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெரிய வெங்காயம், விதை மூலமாக மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்பதால் சிறிய வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். தற்போது மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பு போன்ற காரணங்களால் பெரிய வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ ரூ.130 வரை விலை உயர்ந்துள்ளது இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்தால் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு கிலோ விதை ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கு 135 ஏக்கரில் பயிரிட 550 கிலோ விதை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
எனவே வெங்காயம் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் நில ஆவனங்களான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெரிய வெங்காய விதைகளை பெற்று பயன் பெறலாம். வட்டார வாரியாக தோட்டக்கலை உதவி இயக்குனர் அவர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கரூர் மற்றும் தாந்தோணி ராஜவேலு 9751678794, அரவக்குறிச்சி ஆ.கவிதா 9790107117, க.பரமத்தி கூ.தமிழ்ச்செல்வி 9843643170, கிருஷ்ணராயபுரம் சாகுல் இம்ரான் அலி 9994629884, குளித்தலை கலா 9843196095, தோகைமலை பிரேமா 9750262060, கடவூர் தமிழ்செல்வி 9445117941 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X