என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாசர்பாடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் எரிந்து நாசம்
Byமாலை மலர்28 Dec 2019 10:40 AM GMT (Updated: 28 Dec 2019 10:40 AM GMT)
வியாசர்பாடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசமடைந்தது. தீ விபத்தில், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.
ராயபுரம்:
வியாசர்பாடி மேக்சின் புரத்தை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய தம்பி தாஸ். இருவரும் டிரைவர்கள்.
இருவருடைய வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன. இன்று காலை 6 மணிக்கு ராஜூவும், தாசும் வேலைக்கு சென்று இருந்தனர். இரண்டு பேரின் மனைவிகளும் கோவிலுக்கு சென்றுவிட்டனர். ராஜூ வீட்டில் அவரது மகள் மீனா (20) இருந்தார்.
இந்த நிலையில் அங்கிருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து கரும்புகை எழுந்தது. உடனே மீனா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது சிலிண்டர் வெடிச்சத்தம் கேட்டது.
கண் இமைக்கும் நேரத்துக்குள் 2 வீட்டின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் தீப்பற்றி எரிந்தன.
தகவல் அறிந்ததும் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 2 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தன. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. 10 பவுன் தங்க நகையும் சேதம் அடைந்தது. வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாசர்பாடி மேக்சின் புரத்தை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய தம்பி தாஸ். இருவரும் டிரைவர்கள்.
இருவருடைய வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன. இன்று காலை 6 மணிக்கு ராஜூவும், தாசும் வேலைக்கு சென்று இருந்தனர். இரண்டு பேரின் மனைவிகளும் கோவிலுக்கு சென்றுவிட்டனர். ராஜூ வீட்டில் அவரது மகள் மீனா (20) இருந்தார்.
இந்த நிலையில் அங்கிருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து கரும்புகை எழுந்தது. உடனே மீனா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது சிலிண்டர் வெடிச்சத்தம் கேட்டது.
கண் இமைக்கும் நேரத்துக்குள் 2 வீட்டின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் தீப்பற்றி எரிந்தன.
தகவல் அறிந்ததும் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 2 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தன. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. 10 பவுன் தங்க நகையும் சேதம் அடைந்தது. வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X