என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நிலக்கோட்டை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே அவ்வையம்பட்டி ஓடை பகுதியில் மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக நிலக்கோட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி மற்றும் போலீசார் ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற லாரியை மடக்கினர். போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் லாரியை சோதனையிட்டபோது அதில் ஓடை மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் அழகம்பட்டியை சேர்ந்த பிச்சைமணி என்பவரை தேடி வருகின்றனர்.
தேனி அருகே சின்னமனூர் சுக்காங்கால்பட்டி சின்னகரடு பகுதியில் ஓடைப்பட்டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜாதலைமையில் ரோந்து சென்றனர்.
அப்போது டிராக்டரில் செல்வக்குமார் என்பவர் மணல் கடத்தி வந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடிவிட்டார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாகிய செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்