search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேனியில் மனைவி கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை

    தேனியில் மனைவி கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தேனி:

    தேனி விஸ்வநாத தாஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் குடிபழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×