search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா பறிமுதல்
    X
    குட்கா பறிமுதல்

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

    திருப்பத்தூர் ரெயிலில் 40 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எடுத்து செல்வதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த ரெயில் ஜோலார்பேட்டை வராமல் திருப்பத்தூர் வழியாக செல்வதால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் திருப்பத்தூர் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது ரெயில் கதவு அருகே 2 மூட்டைகளில் 40 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயிலில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×