search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனு (கோப்புப்படம்)
    X
    மனு (கோப்புப்படம்)

    ஓட்டு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க வேண்டும்- தேர்தல் ஆணையரிடம் எஸ்.டி.பி.ஐ. மனு

    உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று கூறி மாநில தேர்தல் ஆணையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மனு அளித்துள்ளார்.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று கூறி மாநில தேர்தல் ஆணையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் மனு அளித்துள்ளார்.

    மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் 30-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவின் போது ஒரு வாக்குச்சாவடியில் அனைத்து பதவிகளுக்கான வாக்குச் சீட்டுகளையும் பதிவு செய்து ஒரே வாக்கு பெட்டியில் வாக்காளர்கள் செலுத்தினர்.

    அதனால் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டியை திறக்காமல், உள் அரங்கில் அதிகாரிகளே ஒவ்வொரு பதவிகளுக்கான வாக்குகளை பிரித்து வெளியில் கொண்டு வந்தனர்.

    அதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது மாநிலம் முழுவதும் அதிகமான முறைகேடுகள் நடந்தன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதுபோன்ற குற்றச்சாட்டு மீண்டும் எழாத வகையில், வேட்பாளர்கள் முன்னிலையிலேயே வாக்குகளை பிரித்து வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×