search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூதாட்டி பலி
    X
    மூதாட்டி பலி

    கும்பகோணம் அருகே தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி பலி

    கும்பகோணம் அருகே தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பழைய அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவருடைய மனைவி சந்திரா (வயது 75). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மாத்திரை சாப்பிடுவதற்காக தண்ணீர் குடித்த போது வீட்டில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்தார். இதில் தொண்டை முழுவதும் வெந்து படுகாயமடைந்த சந்திரா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×