என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை எந்த வகையிலும் திசை திருப்ப முடியாது- திருமாவளவன்
Byமாலை மலர்26 Dec 2019 12:06 AM GMT (Updated: 26 Dec 2019 12:06 AM GMT)
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை எந்த வகையிலும் திசை திருப்ப முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் கொடியது. இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, கட்சிகளை சாராத ஜனநாயக சக்திகள் சார்பிலும் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நாளை (அதாவது இன்று) எழுத்தாளர்கள், கலைஞர்கள், கட்சி சார்பற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கே எதிரான சட்டம். இந்த சட்டத்தை திரும்ப பெறுகிறவரை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையான ஒன்று. அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்று ஆதரவை தெரிவிக்கும்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டும் என்றே கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கருத்துகளால் போராட்டத்தை எந்த வகையிலும் திசை திருப்ப முடியாது. மணியம்மையாரை கொச்சைப்படுத்தும்விதமாக பா.ஜனதாவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் மோசமான கருத்தை பதிவிட்டு உள்ளனர். இதுவும் போராட்டத்தை திசை திருப்பவே திட்டமிட்டு செய்கிறார்கள். இதற்கு பதில் சொல்வதாக சமூக வலைதளத்தில் சக்தியை விரையம் செய்யவேண்டாம். பா.ஜனதாவின் அருவருப்பான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துவதும், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் கொடியது. இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, கட்சிகளை சாராத ஜனநாயக சக்திகள் சார்பிலும் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நாளை (அதாவது இன்று) எழுத்தாளர்கள், கலைஞர்கள், கட்சி சார்பற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கே எதிரான சட்டம். இந்த சட்டத்தை திரும்ப பெறுகிறவரை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையான ஒன்று. அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்று ஆதரவை தெரிவிக்கும்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டும் என்றே கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கருத்துகளால் போராட்டத்தை எந்த வகையிலும் திசை திருப்ப முடியாது. மணியம்மையாரை கொச்சைப்படுத்தும்விதமாக பா.ஜனதாவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் மோசமான கருத்தை பதிவிட்டு உள்ளனர். இதுவும் போராட்டத்தை திசை திருப்பவே திட்டமிட்டு செய்கிறார்கள். இதற்கு பதில் சொல்வதாக சமூக வலைதளத்தில் சக்தியை விரையம் செய்யவேண்டாம். பா.ஜனதாவின் அருவருப்பான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துவதும், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X