என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாத்தான்குளம் அருகே தம்பியை அரிவாளால் தாக்க முயன்ற அண்ணன் கைது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு அமுதுண்ணாக்குடியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன்கள் ரூபன் (வயது 30), தினேஷ் (27). அப்பகுதியில் தினேஷ் ஓர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று மதியம் சாப்பிடுவதற்காக தினேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் அவரது அண்ணன் ரூபன் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அண்ணனை தினேஷ் கண்டித்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதில் ஆத்திரம் அடைந்த ரூபன் மாலையில் குடித்துவிட்டு வந்து தம்பி தினேஷிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் தாக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தினேஷ் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரூபனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்