என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது
Byமாலை மலர்25 Dec 2019 8:35 AM GMT (Updated: 25 Dec 2019 8:35 AM GMT)
மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை சோலையழகு புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 30). இவர் விளக்குத்தூண் வி.வி.கிரி ரோடு சுந்தரராஜபுரம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் சதீஷ்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரிடமிருந்த 1000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து சதீஷ்குமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி சதீஷ்குமாரிடம் பணம் பறித்த ஜீவா நகரைச் சேர்ந்த தினேஷ் (30), செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சபரீஷ் (35) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள் ஆவார்கள். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X