என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருகம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- என்ஜினீயர் பலி
Byமாலை மலர்24 Dec 2019 7:08 AM GMT (Updated: 24 Dec 2019 7:08 AM GMT)
சென்னை விருகம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). என்ஜினீயர். இவர் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 11.30மணி அளவில் அவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் அருகே வந்தபோது எதிர் திசையில் 2வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தவறான பாதையில் வந்து விபத்து ஏற்படுத்திய கேகே நகர் 1-வது செக்டர், 6-வது தெருவைச் சேர்ந்த தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). என்ஜினீயர். இவர் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 11.30மணி அளவில் அவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் அருகே வந்தபோது எதிர் திசையில் 2வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தவறான பாதையில் வந்து விபத்து ஏற்படுத்திய கேகே நகர் 1-வது செக்டர், 6-வது தெருவைச் சேர்ந்த தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X