search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சேர்ந்தமரம் அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

    சேர்ந்தமரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுரண்டை:

    சேர்ந்தமரம் அருகே உள்ள குலசேகரமங்கலம் இந்திரா காலனியை சேர்ந்தவர் வெண்ணிஉடையார். இவரது மகள் முப்புடாதி (வயது 18). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை, உள்ளாட்சி தேர்தல், புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 21-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவி முப்புடாதி உடனே வீட்டிற்கு செல்லாமல் நேற்று சென்றுள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முப்புடாதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று முப்புடாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×