என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
கோவை:
வளைகுடா நாடான சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு நேற்று காலை ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 2 வாலிபர்கள் கொண்டு வந்த ஏர்கூலர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அதிகாரிகள் ஏர்கூலரை சோதனை செய்தனர். அப்போது வாலிபர்கள் அதற்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து மேல்புறத்தில் மெர்குரி முலாம் பூசி கடத்தி வந்தது தெரியவந்தது.
அதில் இருந்த 7 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் தங்க கட்டிகளை கடத்தி வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த முகமது ஷாருக்கான் (வயது 19). கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்த ஹமீமு அக்தர் (21) என்பது தெரிய வந்தது. 2 பேரும் தங்களது பெற்றோரிடம் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்று வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்