என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொள்ளாச்சியில் போலீஸ்காரரை மிரட்டிய வாலிபர்கள் கைது
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் மாவட்ட கல்வி அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
அதை பார்த்த போலீஸ்காரர் விக்னேஷ் அவர்களிடம் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என எச்சரித்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விக்னேசை மிரட்டினர். இது குறித்து அவர் பொள்ளாச்சி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர்கள் பொள்ளாச்சி ஊத்துக்குளியை சேர்ந்த அருள்பிரகாஷ் (வயது 26) டிரைவர் மற்றும் ஜெய கோகுல கிருஷ்ணன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்