search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அம்மாப்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    அம்மாப்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே அருந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி துர்காதேவி(20), இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த துர்காதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாப்பேட்டை போலீசார் துர்காதேவி உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து துர்காதேவி தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ளனர். துர்காதேவிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆவதால் கும்பகோணம் ஆர்.டி.ஓ வீராசாமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×