search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திண்ணை பிரசாரம்

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
    சிவகாசி:

    அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகாசி கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீரை நான் கொண்டு வரமுடியாது என்று எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தனர். நான் கொடுத்த வாக்குறுதிபடி தற்போது தாமிரபரணி கூட்டுகுடிநீரை கொண்டு வந்துள்ளேன். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    சிவகாசி, சாத்தூர் வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 650-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்றும் 100 கிராமங்களில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

    இன்னும் 20 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்த வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

    ஏழை, எளிய மக்கள் விரும்பும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. விவசாயிகளின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×