search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

    கமுதி அருகே காதலியை ஏமாற்றிய இளைஞரை மண்டலமாணிக்கம் போலீசார் கைது செய்தனர்.

    கமுதி:

    கமுதி அருகே மீட்டாங்குளத்தை சேர்ந்த கொட்டார் மகள் வீரலட்சுமி (வயது 29). இவரது தந்தை கடந்த 6 வருடங்களுக்கு முன்பும், தாயார் 4 வருடங்களுக்கு முன்பும், இறந்து விட்டதால் வீரலட்சுமி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பக்கத்து கிராமமான கூடலாவூரணியை சேர்ந்த பாஸ்கரன் மகன் தனசேகரன் (24) என்ற வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இதனையடுத்து வீரலட்சுமியை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கியுள்ளார். வீரலட்சுமி பலமுறை எடுத்து கூறியும் தனசேகரன் திருமணம் செய்ய மறுத்தார்.

    இது குறித்து வீரலட்சுமி மண்டலமாணிக்கம் போலீசில் புகார் செய்தார். கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி, போலீசார் விசாரித்து வந்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை கைது செய்தனர்.

    Next Story
    ×