search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    முத்தியால்பேட்டையில் மார்க்கெட்டுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்

    முத்தியால்பேட்டையில் மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற கல்லூரி மாணவி மாயமானார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். பூ வியாபாரி. இவரது மகள் மீனா (வயது 17).

    இவர் பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று மீனா தனது பெற்றோரிடம் முத்தியால்பேட்டை மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் மீனா இல்லை.

    இதையடுத்து முருகேசன் தனது மகள் மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மீனாவை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×