search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது

    சென்னையில் தி.மு.க. நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.
    சென்னை:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதி தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருந்தார். 

    இதற்கிடையே, தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், தி.மு.க. பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சைக்காக கமல்ஹாசன் வெளிநாடு சென்றதால் சென்னையில் டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தி.மு.க. பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×