search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

    தஞ்சை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் புது காலனி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). ரவுடியான இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    இவர் நேற்று கள்ளப்பெரம்பூர் சக்கரசாமந்தம் புறவழிச்சாலை அருகே கூலித்தொழிலாளியான சங்கர் என்பவரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த 300 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் பற்றி சங்கர் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி செல்வக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×