என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே காய்கறி வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
Byமாலை மலர்21 Dec 2019 10:09 AM GMT (Updated: 21 Dec 2019 10:09 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே காய்கறி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே ஆலந்தளிர் பகுதியில் இருந்து தேனி சந்தைக்கு காய்கறிகளுடன் வேன் வந்தது. இந்த வேனை முத்தாலம்பாறையை சேர்ந்த பிச்சை மகன் முருகன் ஓட்டி வந்தார்.
இதில் தொழிலாளர்களும் காய்கறிகளுடன் பயணம் செய்தனர். வருசநாடு- கண்டமனூர் சாலையில் அண்ணாநகர் பகுதியில் வந்தபோது திடீரென வேனின் பின் பக்க டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறி ஓடிய வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
வேனில் பயணம் செய்த கிருஷ்ணன் (வயது35), முத்துக்காளை (65), சுப்பிரமணி (60), சீனி (65) மற்றும் வேன் டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்து தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த மற்றொரு முருகன் (38) மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X