search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாயர்புரத்தில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    சாயர்புரத்தில் சேதமான சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாயர்புரம்:

    சாயர்புரம் வழியாக வாகை குளம் செல்லும் நெடுஞ்சாலை மிகவும் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் தினமும் ஏராளமான பள்ளி பேருந்துகள், நெல்லை மற்றும் தூத்துக்குடி செல்லும் பேருந்துகள், லாரிகள் அதிகமாக செல்கின்றன. தொடர்ந்து பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் முள்ளன்விளை, குமாரபுரம், கட்டாலங்குளம், புதூர், முடிவைத்தானேந்தல் வரை நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×