search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு தலைமைச் செயலகம்
    X
    அரசு தலைமைச் செயலகம்

    தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை

    தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

    கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த தொடர் விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×