search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    புதுப்பெண் தற்கொலை குறித்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விசாரணை

    திருமணமான 3 நாளில் காதலனுடன் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
    கோவில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டூர் காலபெருமாள் பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் ரஞ்சிதா (வயது 19). இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சாத்தூர் அருகே உள்ள பிறவிபட்டியை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மனோஜ்பாண்டியன் (19). இவர் சாத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதலுக்கு ரஞ்சிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த 13-ந்தேதி ரஞ்சிதாவை உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனினும் ரஞ்சிதா தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் தவித்தார்.

    இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி கணவரை உதறி விட்டு, வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சிதா தன்னுடைய காதலனான மனோஜ் பாண்டியனுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு மலையடிவாரத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் 2 பேரும் வி‌‌‌ஷம் குடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் விரைந்து சென்று, மயங்கி கிடந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ரஞ்சிதாவை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும், மனோஜ் பாண்டியனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரஞ்சிதாவுடன் வி‌ஷம் குடித்த அவரது காதலன் மனோஜ் பாண்டியனுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருமணமான 3 நாளிலேயே ரஞ்சிதா தற்கொலை செய்திருப்பதால், அவரது சாவு குறித்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×