என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Dec 2019 6:20 PM GMT (Updated: 18 Dec 2019 6:20 PM GMT)
ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து நேற்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
இந்திய தொழில் வணிகத்தை முற்றிலும் சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், தடை செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் வரவேற்று பேசினார்.
இதில் நகை வியாபாரிகள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், செல்போன் கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது உள்நாட்டு வணிகத்தை பாதுகாத்திட வேண்டும். ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். சில்லரை வணிகத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகள், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, வெண்ணந்தூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
இந்திய தொழில் வணிகத்தை முற்றிலும் சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், தடை செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் வரவேற்று பேசினார்.
இதில் நகை வியாபாரிகள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், செல்போன் கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது உள்நாட்டு வணிகத்தை பாதுகாத்திட வேண்டும். ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். சில்லரை வணிகத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகள், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, வெண்ணந்தூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X