என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் அழகு நிலைய உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்18 Dec 2019 4:07 PM GMT (Updated: 18 Dec 2019 4:07 PM GMT)
கிருஷ்ணகிரியில் தொழில் போட்டி காரணமாக அழகு நிலைய உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 41). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆனந்த் (வயது 35) என்பவரும் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று ஆனந்த், அவரது மனைவி அனிதா மற்றும் உறவினர்கள் கோகுல், ஷகில் ஆகியோர் கந்தசாமியை தாக்கினார்.
இதில் காயமடைந்த கந்தசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி போலீஸ் நிலையத்தில் ஆனந்த் உள்பட தாக்கிய 4 பேர் மீது கந்தசாமி புகார் செய்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X