search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தர்மபுரியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேர் மயக்கம்

    தர்மபுரியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேர் மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் புலிக்கரை அடுத்துள்ள நக்கள்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு ஷாலினி (வயது8), தாரணி (13), முத்தரசி (14) என்ற 3 மகள்கள் உள்ளனர். மேலும் இவரது உறவினர் சண்முகம் (31), சண்முகத்தின் மனைவி ரீனா மேரி (30) மற்றும் இவர்களது மகன் ஆலன் தர்ஷன் (3) ஆகியோர் நேற்று ஒன்றாக பல்லி விழுந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.

    இதனால் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அந்த 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    Next Story
    ×