என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்18 Dec 2019 9:50 AM GMT (Updated: 18 Dec 2019 9:50 AM GMT)
தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள குருங்குளம் சர்க்கரை ஆலையை சேர்ந்தவர் கண்ணன் (வயது27). இவரது மனைவி அனுசுயா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் கண்ணன் வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவதன்று மனவேதனையால் கண்ணன் அவருடைய வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து கண்ணனின் மனைவி அனுசுயா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை அருகே உள்ள குருங்குளம் சர்க்கரை ஆலையை சேர்ந்தவர் கண்ணன் (வயது27). இவரது மனைவி அனுசுயா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் கண்ணன் வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவதன்று மனவேதனையால் கண்ணன் அவருடைய வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து கண்ணனின் மனைவி அனுசுயா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X