search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்ட கூட்டத்தில் உரையாற்றிய சீமான்
    X
    ஆர்ப்பாட்ட கூட்டத்தில் உரையாற்றிய சீமான்

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

    குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக அ.வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் சார்பாக ஆ.கி.சோசப் கென்னடி, 

    ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மு.களஞ்சியம்

    தமிழர் நலப் பேரியக்கம் சார்பாக மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பாக செ.முத்துப்பாண்டி, தமிழர் தாயகம் கட்சி சார்பாக கு.செந்தில் மள்ளர், இஸ்லாமியர் சேவை சங்கம் சார்பில் ஏ.கே.சாகுல் அமீது, தமிழ்த்தேசியக் கட்சி சார்பில் தமிழ்நேசன் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். 
    Next Story
    ×