என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருப்புக்கோட்டை: ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்17 Dec 2019 2:20 PM GMT (Updated: 17 Dec 2019 2:20 PM GMT)
அருப்புக்கோட்டையில் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை:
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஆன்லைன் லாட்டரி வாங்கி கடனாளியான ஒரு குடும்பத்தில் விஷம் குடித்து குழந்தைகள், கணவன், மனைவி உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை சம்பவம் வாட்ஸ்-அப் மூலம் தமிழகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்பவர்களை தமிழகம் முழுவதும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து அருப்புக்கோட்டையில் அன்பு நகரை சேர்ந்த கருப்பசாமி (வயது 45), நாடார் மேல வீதியை சேர்ந்த சிவசங்கரன் (70), வேல்முருகன் காலனியை சேர்ந்த சக்திவேல் (55) ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து டவுன் போலீசார் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X