என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் கோர்ட்டு பணியாளருக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேர் கைது - நீதிபதி அதிரடி நடவடிக்கை
Byமாலை மலர்17 Dec 2019 11:47 AM GMT (Updated: 17 Dec 2019 11:47 AM GMT)
திருப்பூரில் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேரை கைது செய்ய நீதிபதி வடக்கு போலீசுக்கு உத்தரவிட்டார்.
திருப்பூர்:
பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோவை, தாராபுரம் நீதிபதி, வக்கீல் மற்றும் போலீஸ் துறையினரை அவதூறாகவும், ஆட்சேபனைக்குரிய வகையில் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி தகவல்களை வெளியிட்டனர். இது குறித்து நீதிபதி போலீசில் புகார் செய்தார்.
திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவதூறு பரப்பியதாக திருப்பூர் புதுக்காலனியை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், உடுமலை ராம்மோகன், தாராபுரம் மூலனூரை சேர்ந்த வித்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதுகுறித்தான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 3 பேரின் எப்.ஐ.ஆரை கேட்டு கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து நீதிபதி சுந்தர்ராஜன் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேரை கைது செய்ய திருப்பூர் வடக்கு போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிக்குமார் (வயது 34), நாகராஜன் (45), விஜயகுமார் (50), சிவக்குமார் (41), சரவணன் (25), ராக்கிமுத்து (41), சுப்பிரமணியன் (43) ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோவை, தாராபுரம் நீதிபதி, வக்கீல் மற்றும் போலீஸ் துறையினரை அவதூறாகவும், ஆட்சேபனைக்குரிய வகையில் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி தகவல்களை வெளியிட்டனர். இது குறித்து நீதிபதி போலீசில் புகார் செய்தார்.
திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவதூறு பரப்பியதாக திருப்பூர் புதுக்காலனியை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், உடுமலை ராம்மோகன், தாராபுரம் மூலனூரை சேர்ந்த வித்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதுகுறித்தான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 3 பேரின் எப்.ஐ.ஆரை கேட்டு கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து நீதிபதி சுந்தர்ராஜன் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேரை கைது செய்ய திருப்பூர் வடக்கு போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிக்குமார் (வயது 34), நாகராஜன் (45), விஜயகுமார் (50), சிவக்குமார் (41), சரவணன் (25), ராக்கிமுத்து (41), சுப்பிரமணியன் (43) ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X