search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவி தற்கொலை
    X
    கல்லூரி மாணவி தற்கொலை

    திருப்பூரில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    திருப்பூரில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள வித்தியாலயம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் வினிஷா (18). இவர் திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவி வினிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அவரது அண்ணன் தீபக் அங்கு வந்தார். அவர் வினிஷாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    வினிஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×