என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
Byமாலை மலர்16 Dec 2019 5:33 PM GMT (Updated: 16 Dec 2019 5:33 PM GMT)
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலத்த காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள கடவரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40), விவசாயி. இவருக்கு துளசி என்ற மனைவியும், ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஏரிசின்ன கவுண்டன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கோவிந்தன் தவறி கீழே விழுந்தார். இதில் கோவிந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக உயிரி ழந்தார்.
இதுகுறித்து கோவிந்தனின் மனைவி துளசி கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X