search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    புதுவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்

    புதுவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை சாரம் அய்யனார் நகர் 2-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் பிரகதி (வயது25). இவர் புதுவை நேரு வீதியில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். பிரகதிக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்து இருந்தனர். நிச்சயம் செய்த பின்னர் அந்த மாப்பிள்ளையிடம் பிரகதி செல்போனில் பேசி பழகி வந்தார்.

    திருமணம் நடைபெற ஒரு மாதம் இருந்த நிலையில் மாப்பிள்ளை விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து காலை இழந்த மாப்பிள்ளைக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் விரும்ப வில்லை என தெரிகிறது. மேலும் பிரகதிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். மேலும் திருமணம் செய்து கொண்ட பின்னர் விபத்தில் மாப்பிள்ளை சிக்கி இருந்தால் கைவிடுவோமா என்று பெற்றோரை சமாதானப்படுத்தி வந்தார். ஆனாலும் பிரகதியின் பெற்றோர் தங்களது முடிவில் விடாப்பிடியாக இருந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல பிரகதி ஜவுளிகடைக்கு வேலைக்கு சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் பிரகதி வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் ஜவுளி கடைக்கு சென்று விசாரித்தனர். அப்போது வேலை முடிந்து பிரகதி சென்று விட்டதாக ஜவுளிக்கடை சூப்பர்வைசர் தெரிவித்தார்.

    இதையடுத்து பிரகதியை அவரது பெற்றோர் உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் சென்று தேடினர். ஆனால் எங்கும் பிரகதி இல்லை. இதைத்தொடர்ந்து பிரகதியின் தந்தை விஜயகுமார் தனது மகள் மாயமானது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை பிரகதி கரம் பிடிக்க இருக்கலாம் என்று கோணத்திலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×