search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சுவாமிமலை அருகே குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த இருவர் கைது

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவற்கூடம் மேலதெருவை சேர்ந்தவர் பிரபுதாஸ் (வயது45), இவருக்கு அதேபகுதியில் சொந்தமாக குளம் உள்ளது. இதில் மீன்வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது குளத்தில் நீலத்தநல்லூரை சேர்ந்த செல்வம் (30), கண்ணன் (45) ஆகியோர் திருட்டுத்தனமாக வலைவிரித்து மீன்பிடித்துள்ளனர்.

    இதனை பார்த்த பிரபுதாஸ் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து சுவாமிமலை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பிரபுதாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×